×

சத்தி அருகே பவானி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

சத்தியமங்கலம், மே 12: புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நீலிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (25). கட்டிட தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் தனது அக்காள் கணவரான கோபி எலத்தூர் பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவர் உடன் சத்தியமங்கலம் அருகே உள்ள அரசூர் பவானி ஆற்றிற்கு சென்றார். பவானி ஆற்றின் கரையில் அருள்ராஜ் துணி துவைத்துக் கொண்டிருந்த போது ஆனந்தராஜ் ஆற்று நீரில் இறங்கி குளித்தார். அப்போது, திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற ஆனந்தராஜ், நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி மாயமானார். இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வீரர்கள் ஆனந்தராஜை தேடினர். இந்நிலையில், நேற்று மாலை அவரது உடல் அதே பகுதியில் மீட்கப்பட்டது. இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சத்தி அருகே பவானி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Bhavani river ,Chatti ,Sathyamangalam ,Anandaraj ,Neelipalayam ,Punjaipuliyampatti ,Dinakaran ,
× RELATED மதுபோதையில் பவானி ஆற்றில் இறந்தவர் போல் கிடந்த உபி வாலிபர்